Monday 6th of May 2024 07:50:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோ பாடசாலைகளுடன் தொடா்புடைய  தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பு!

ஒன்ராறியோ பாடசாலைகளுடன் தொடா்புடைய தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பு!


கனடா - ஒன்ராறியோ மாகாணத்தில் பாடசாலைகளுடன் தொடர்புடைய 42 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றில் கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில் மட்டும் பாடசாலைகளுடன் தொடா்புடைய 19 பேர் தொற்றுக்குள்ளாகி நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் ஒன்ராறியோ பாடசாலைகளில் மொத்தம் 180 தொற்று நோயாளர்கள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், உரிமம் பெற்ற சிறுவர் பராமரிப்பு மையங்களில் 108 தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று ஒன்ராறியோ பாடசாலைகளில் இனங்காணப்பட்ட புதிய தொற்று நோயாளர்கள் 42 பேரில் 21 போ் மாணவா்களாவர். 05 போ் பாடசாலை பணியாளர்கள். ஏனைய 16 போ் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, ஒன்ராறியோவில் புதன்கிழமை மொத்தம் 335 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாகாணத்தில் உள்ள 4,828 பொதுப் பாடசாலைகளில் 153 பாடசாலைகளில் குறைந்தது ஒரு தொற்று நோயாளியாவது இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். தொற்று நோய் கண்டறியப்பட்டதை அடுத்து இரண்டு பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாகவும் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ முழுவதும் சிறுவர் பராமரிப்பு மையங்களில் நேற்று புதன்கிழமை 13 புதிய கோவிட் -19 தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.

ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அச்சத்தின் மத்தியில் இந்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தினமும் பாடசாலைகளுடன் தொடர்புடைய தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE